இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவரும், விடுத லைப் போராட்ட தியாகியும் – மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு என். சங்கரய்யா அவர்கள் உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற் றேன்.
“வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு!’’ - என சட்டமன்றத்தில் உரை யாற்றியவர், தான் வாழ்ந்த 102 வயது வரை உழைப்பாளர்களின் உற்ற தோழ னாக நின்று பல போராட்டங்களை முன் னெடுத்தவர் சங்கரய்யா. பொது வாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் இன்று வரை கம்யூனிசக் கொள்கைப் பிடிப்பு டன் இருந்து பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
இத்தகு சிறப்புகள் வாய்ந்த பெருந் தலைவரின் மறைவு நமக்கெல்லாம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. சங்கரய்யா அவர்களின் மறைவால், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத் தாருக்கும்– அரசியல் நண்பர்களுக்கும்– அவருடைய பின்பற்றாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற, இறைவனை வேண்டுகின்றேன்.